திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில், அந்தப் பகுதி ஜமாத்துக்குச் சொந்தமான முஸ்லிம்களின் மயான இடத்தை, 2008ல் தங்க நாற்கர சாலைத் திட்ட விரிவாக்கத்துக்கு அளித்திருந்தனர். அப்போது அரசுத் தரப்பில் வேறு இடத்தை வழங்குவதாகக் கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் ஒதுக்கிய இடம், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான மயான பூமி என்பதால், தங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்தப் பிரச்னையில் இன்று தீர்வு காண வலியுறுத்தி, அந்தப் பகுதி முஸ்லிம்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவருகின்றனர்.