ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி: சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன்

காங்கிரஸ் கட்சி ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. மத்தியஅரசில் அங்கம் வகித்த கருணாநிதி தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.

News image
Updated On :4 பிப்ரவரி 2014, 12:50 pm

ஜி.சுந்தரராஜன்

காங்கிரஸ் கட்சி ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. மத்தியஅரசில் அங்கம் வகித்த கருணாநிதி தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 66வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து கடலூர் (மேற்கு) மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் டி.கலியமூர்த்தி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக செயலாளருமான ஏ.அருண்மொழிதேவன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:

நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் மக்கள் மீது அக்கறையுள்ள கட்சி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மட்டும்தான். தமிழகத்தில் சுனாமி, வெள்ளம், வறட்சி, விலைவாசி உயர்வு, மின்வெட்டு என இருந்த போது ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா மத்தியஅரசு நிதிஉதவி, ஒத்துழைப்பு இல்லாமல் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். கருணாநிதியால் ஏற்பட்டு மின்வெட்டு 95 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசினால் இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. துணிச்சல், தைரியம் இல்லாத தலைமை உள்ளது. தையரியமிக்க, துணிச்சல்மிக்க, நாட்டுப்பற்றுமிக்க தலைவர் ஜெயலலிதாதான் பிரதமராக வரவேண்டும் என அனைவரும் கூறுகின்றனர். தேசத்தின் மீது பற்றுள்ள தலைமை இந்தியாவிற்கு வேண்டும்.

எனவே நாற்பது தொகுதிகளில் நாம் வெற்றி பெற்று பிரதமர் நாற்காலியில் அமரவைத்து அலங்கரிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. பிப்.6-ம் தேதி காட்டுமன்னார்கோயிலில் மாவட்ட இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது என ஏ.அருண்மொழிதேவன் தெரிவித்தார்.

கூட்டத்தில் அதிமுக மீனவர் பிரிவு மாநில செயலாளரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, சிதம்பரம் தொகுதி செயலாளர் பி.எஸ்.அருள், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் சந்திரசேகர், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், கீரப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஆர்.ஜெயபாலன், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். தொகுதி செயலாளர் பி.எஸ்.அருள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.