2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷண் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பொய் என திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவர் அளித்த பதில்:
கேள்வி: ஆம் ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷண், போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் பேசிய பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, ஆவணங்களை திருத்தியதாக சொல்லியிருக்கிறாரே
பதில்: எல்லாம் பொய்.
கேள்வி: உங்கள் மீதும் குற்றச்சாட்டியிருக்கிறாரே
பதில்: மற்ற தலைவர்களிடம் இதுபோல கேள்வி கேட்க முடியுமா
கேள்வி: நிருபராக இருந்த நீங்கள் இப்படிச் சொல்லலாமா
பதில்: அதனால் தான் உங்களை மதித்து நடந்து வருகிறேன். இப்போது மதிக்கிறேன். அதனால் தான் அங்கு நின்று கொண்டிருந்த உங்களையெல்லாம் அருகில் அழைத்துப் பேசுகிறேன்.
கேள்வி: தமிழக டிஜிபி ராமானுஜத்தின் பதவிக் காலத்தை நீடித்துள்ளார்களே
பதில்: அது பற்றி எனக்குத் தெரியாது.
கேள்வி: மூன்றைவது அணியின் சார்பில், இந்தத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடப் போவதாகவும், அவர் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்றும் சொல்லப்படுகிறதே
பதில்: ஆனால் சந்தோஷம்.
இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


