ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.புரட்சிமணி தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன், மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏ.ராதாகிருஷ்ணன், ஆர்.சச்சிதானந்தம் தொழிலதிபர் கே.ஐ.மணிரத்தினம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் கே.ஜி.குமார், மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், பொதுச்செயலாளர் எம்.என்.ராதா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் துரை.சிங்காரவேலு, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த், எம்.ஜி.ராஜராஜன், காட்டுமன்னார்கோயில் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.வி.இளங்கீரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் புவனகிரி சவுந்திரபாண்டியன், கே.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.