முன்னதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில செயற்குழுக்கூட்டம் சிதம்பரம் மேலவீதி பெல்காம் சத்திரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகாசம்மேளன பொதுச் செயலாளர் கு.பாலசுப்ரமணியன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, நிர்வாகிகள் சா.ராமச்சந்திரன், எம்.ராமலிங்கம், எம்.சுப்பிரமணியன், செல்லத்துரை, மாவட்டத் தலைவர் துரைசேகர், அமைப்புச் செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.