திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

லாரி ஓட்டுநரைக் கட்டிப் போட்டு கண்டெய்னர் லாரி கடத்தல்

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே லாரி ஓட்டுநரின் கண்கள் கைகளைக் கட்டிப்போட்டு, லாரியைக் கடத்திச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On :7 பிப்ரவரி 2014, 11:05 am

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே லாரி ஓட்டுநரின் கண்கள் கைகளைக் கட்டிப்போட்டு, லாரியைக் கடத்திச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து அரியலூர் சிமிண்ட் நிறுவனத்துக்குச் சென்றது லாரி. இடையில் உறக்கம் வரவே, லாலாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, ஓரத்தில் படுத்து உறங்கினார் ஓட்டுநர் முருகையா (29). இவர் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், அங்கே வந்த மர்ம நபர்கள் 4 பேர்,. அவரின் கண்கள் கைகளைக் கட்டி, லாரியை கடத்திச் சென்றனராம். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், லாலாப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.