இம் மாவட்டத்தில் கடந்த 14-4-2013 மற்றும் 15-4-2013 ஆகிய தேதிகளில் வீசிய சூறாவளிக் காற்றினால் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைப் பயிர்கள் சேதமடைந்தன.50 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 1364 விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 வீதம் மொத்தம் 311.14 ஹெக்டேருக்கு ரூ.23 லட்சத்து 33 ஆயிரத்து 550 நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது.அந்தத் தொகை திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.