தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, குற்றவாளிகளை உடன் கைது செய்ய வலியுறுத்தி, உடலை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததை அடுத்த மறியலை வாபஸ் பெற்றனர். இதனால் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலை 8 மணி முதல் 12 மணி வரை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவலர் தெய்வக்குமார் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.