கடலூர் மஞ்சக்குப்பத்தில் மகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட முடியாத ஏக்கத்தில் தாய் தீக்குளித்தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30). இவரது மனைவி கீர்த்தனா(26). இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
பாலமுருகன் மருந்து விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். ஆனால் இந்த பணி முழுமையாக அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவ்வப்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார். வீட்டில் வறுமை ஏற்பட்டுள்ளது.
மேலும் மகளுக்கான பள்ளி கட்டணம் கட்டவும் முடியாமல் போனது. மனமுடைந்து காணப்பட்ட கீர்த்தனா திங்கள்கிழமை மாலை உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். காப்பாற்ற சென்ற பாலமுருகன் தீக்காயமடைந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து புதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

