சிதம்பரம் நகராட்சியில் சொத்துவரி ரூ.3.50 கோடியும், குடிநீர் வரி ரூ.80 லட்சமும் பாக்கி உள்ளது. வரி கட்டுமாறு ஆட்டோ மூலம் நகரில் அறிவிப்பு செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில் வரி செலுத்தாத வீடுகளை கண்டறிந்து குடிநீர் இணைப்பு, புதைவடிகால் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் கொத்தங்குடித்தெருவில் குடிநீர் வரி செலுத்தாத ஒருவரின் வீட்டு குடிநீர் இணைப்பினை செவ்வாய்க்கிழமை நகராட்சி மின்கண்காணிப்பாளர் ஏ.ஷேக்மைதீன், வருவாய் ஆய்வாளர் எஸ்.சரவணக்குமார் மற்றும் உதவியாளர்கள் துண்டித்தனர்.