அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தலைமை வகித்தார். நகர தலைவர் பாப்கான் கார்த்திகேயன், மாவட்ட விவசாய அணிச்

Updated On :19 பிப்ரவரி 2014, 11:36 am

விருதுநகர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தலைமை வகித்தார். நகர தலைவர் பாப்கான் கார்த்திகேயன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் சீனிச்சாமித்தேவர், மாவட்ட துணைத் தலைவர் ராஜலிங்கராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதை தடுக்கும் வகையில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். விருதுநகர் மாவட்டம் மழையில்லாமல் பயிர் கருதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் வட்டார தலைவர் செ.ராஜா, சுவகாசி வட்டார தலைவர் சுப்புராஜ், அருப்புக்கோட்டை நகர தலைவர் கனகவேல் உள்ளிட்ட கங்கிரஸ் கட்சியினர் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.