ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானாவை பிரித்து தனி மாநிலமாக்கும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியதை தொடர்ந்து சீமாந்திரா முழுவதும் புதன்கிழமை பந்த் நடைபெற்றது.
திருப்பதியில் காலை முதலே பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மேலும் முக்கிய பகுதிகளில் போராட்டகாரர்கள் மரங்களை வெட்டி போட்டும் டயர்களை எரித்தும் நெடுஞ்சாலைகளை வழிமறித்தனர். இதனால் ஏழுமலையானை தரிசிக்க வந்தவர்கள் தங்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர்.
ஆனால் திருமலைக்கு மட்டும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. இதில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன், தெலுங்கு தேசம், கூட்டமைப்பு குழுக்கள், என்.ஜி.ஓக்கள் இணைந்து ஈடுபட்டனர். இதனால் திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டத்தில் பதட்டம் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.