திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
செங்கோட்டை அருகே உள்ள வல்லம் இந்திரா காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் மகேஷ் (27). கூலித்தொழிலாளி. அதே ஊரின் கலைஞர் காலனியைச் சேர்ந்த முருகையா மகன் குமார் என்ற செந்தில்குமார் (28). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் உண்டாம்.
26-6-2009 அன்று இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதாம்.
இதில் ஆத்திரமடைந்த குமார், அரிவாளால் மகேஷை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ் இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நசீர்அகமது, குற்றஞ்சாட்டப்பட்ட குமாருக்கு ஆயுள்சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில், மாவட்ட அரசு குற்றவியல் துறை வழக்குரைஞர் என்.சிவலிங்கமுத்து ஆஜரானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் சுயசரிதை

90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!

மெய்ப்பொருள்

மாணவர்களுக்கு ஓஆர்எஸ், தடையற்ற மின்சாரம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

