சுனாமி, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதிக்காத வகையில் கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
விருதுநகர் கேவிஎஸ் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளிடையே அணு உலை குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக வந்த கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் எஸ்.எஸ்.சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலை கடல் மட்டத்திலிருந்து 25 அடி உயரம் பாதுகாப்பான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுனாமி, புயல் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களிலும் எக்காரணம் கொண்டும் பாதிக்காது. அப்படியே பேரிடர் தாக்கினாலும் 3 நொடிகளில் அனைத்து இயந்திர பிரிவுகளும் நின்று விடும் அளவிற்கு மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த அணு உலை மூலம் 69 கோடி யூனிட் மின்சாரம், 680 மெகவாட் அளவிற்கு தயார் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் முதல் உலையிலிருந்து மின்சாரம் தயார் செய்வது 100 சதவீதம் இலக்கை எட்டும் என கருதப்படுகிறது. மேலும், புவிஈர்ப்பு விசை, காற்று மூலம் அணு உலையை புதுப்பிக்கும் சோதனை மூலம் வெற்றி கண்டுள்ளோம். இதையடுத்து 2-வது அணு உலைக்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது. அதுவும், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாததிற்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால மின்சக்தி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரஷ்யா, பங்காளதேஷ் உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் அணு உலைகளை நிறுவி வருகின்றது. அந்த வகையில் சீனாவில் 29 புதிய அணு உலைகளை தொடங்கியுள்ளனர். அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் தூய்மையான சக்தி ஆகும். இதுவரையில் அணு உலை குறித்து பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பொதுமக்களிடையே 1.50 லட்சம் பேரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
அதையடுத்து, செந்திக்குமார நாடார் கல்லூரி மற்றும் கேவிஎஸ் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார். இதில், பொதுமக்கள் விழிப்புணர்வு குழுத் தலைவர் எஸ்.காளிராஜன், செயலாளர் பண்டாரம் மற்றும் செந்திக்குமார நாடார் கல்லூரியின் முதல்வர் சுந்தரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


