டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மக்கள் நம்மை எடைபோடவுள்ளனர்: கடைசி கூட்டத்தொடரில் மன்மோகன் சிங் பேச்சு

இன்றுடன் 15 வது மக்களவை   முடிவடைவதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றினார்.

News image
Updated On :21 பிப்ரவரி 2014, 11:59 am

வேல்முருகன்

 இன்றுடன் 15 வது மக்களவை   முடிவடைவதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றினார்.

 அப்போது  பல்வேறு சூழல்களில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டதாக  மக்களவை இருந்துள்ளது. தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. 

ஏழை மக்களுக்கு பயன்படும் வண்ணம், உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இந்த 15 வது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக.  மக்கள்  நம்மை பற்றி என்ன எடை போட்டு வைத்திருக்கின்றார்கள் என்பதை மதிப்பீடு செய்யும் கால கட்டத்தில் இருக்கிறோம்.

இந்த நேரத்தில், மக்களவை சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.