தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: வீரப்ப மொய்லி

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்ட விலை புத்தாண்டு முதல் ரூ.220 அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா,  மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும்

News image
Updated On :2 ஜனவரி 2014, 1:53 pm

வேல்முருகன்

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்ட விலை புத்தாண்டு முதல் ரூ.220 அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா,  மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் இந்த விலைவாசி உயர்வு குறித்து பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

மேலும ஆண்டுக்கு 9 சிலிண்டர் வரை மானிய விலையில் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்கள் வெளிச்சந்தை விலையில் விற்கப்படுவதாகக் கூறினார். சர்வதேச சந்தை நிலவரத்தால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, எரிவாயு விலையை உயர்த்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

 மேலும் நாட்டின் மொத்த குடும்பங்களில் மானியம் இல்லாத சிலிண்டரை வாங்கும்10 சதவீதத்தினர் மட்டுமே இந்த விலை உயர்வால் பாதிப்பார்கள் என்றும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.