எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லை அரசு மருத்துவமனையில் 7 நாள் சிசுவை தவிக்க விட்டுச் சென்ற தாய்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி பெண் ஒருவர் பிரசவத்துக்காக உள்நோயாளியாகச் சேர்ந்தார். அவரது பெயர் லட்சுமி எனவும், கணவர் பெயர் இன்பராஜ் எனவும்,

News image
Updated On :5 ஜனவரி 2014, 3:10 pm

முத்துக்குமார்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாள்களே ஆன சிசுவை தவிக்க விட்டுச் சென்ற தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி பெண் ஒருவர் பிரசவத்துக்காக உள்நோயாளியாகச் சேர்ந்தார். அவரது பெயர் லட்சுமி எனவும், கணவர் பெயர் இன்பராஜ் எனவும், நான்குனேரியில் உள்ள ஜெ.ஜெ.நகரில் வசிப்பதாகவும் தெரிவித்து சேர்ந்தாராம். அவருக்கு கடந்த 29-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அவரது குழந்தையையும்,  அவரையும் பார்க்க உறவினர்கள் யாரும் வரவில்லையாம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு குழந்தையை தவிக்க விட்டுவிட்டு லட்சுமி தலைமறைவாகிவிட்டார். இதையறிந்ததும் மருத்துவமனை ஊழியர்கள், திருநெல்வேலி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நான்குனேரி போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அந்தப் பெண் கொடுத்த முகவரி குறித்து விசாரித்தபோது, அது பொய்யான முகவரி என்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை டீன் சௌந்திரராஜன் கூறுகையில், சிசுவை விட்டுவிட்டு பெண் மாயமானது குறித்து போலீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில், சிசு மருத்துவமனையில் பராமரிப்பில்தான் உள்ளது. மேற்கொண்டு காப்பகங்களில் ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.