ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மக்களவைத் தேர்தல் கூட்டணி: ஜன. 9 ல் தஞ்சையில் தமமுக பொதுக்குழுக் கூட்டம்

மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்து தஞ்சையில் ஜன. 9 ம் தேதி நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2014, 2:04 am

ஷேக் அப்துல்காதர்

மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்து தஞ்சையில் ஜன. 9 ம் தேதி நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கட்சியின் மாநில செயற்குழு,
பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 9 ம் தேதி (வியாழக்கிழமை) தஞ்சையில் வைத்து நடைபெறுகிறது. மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிலைபாடு, கூட்டணி அமைப்பது குறி்த்து முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் குரூப் 1 தேர்வில் வயது வரம்பு சலுகை குறித்த மாணவர்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு்ள்ளது. குரூப் 1 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 30 ஆகவும், பிற அனைத்து பிரிவினருக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு எழுதுவோரில் 50 சதவிகிதத்தினர் கிராமப்புற மாணவர்கள். குரூப் 1 தேர்வு ஆண்டுதோறும் நடத்துவதில்லை.
கடந்த 13 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, பீகார் போன்ற மாநிலங்களில் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆக உள்ளது. ஆகவே தமிழகத்திலும் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் பின்பற்ற வேண்டும். இடஒதுக்கீடு முறை ஒவ்வொரு பணி நியமனத்திலும் உறுதி செய்யவேண்டும். மான்யம் இல்லாத சமையல் எரிவாயு, பெட்ரோல், டீஸல் விலை உயர்வினால் ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மத்திய அரசு இதனை திரும்ப பெற வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.