மார்கழி நீராட்ட உற்சவம் நாளை தொடக்கம்: ஸ்ரீஆண்டாள் பிரியாவிடை
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் ஜனவரி 7 (செவ்வாய்கிழமை) தொடங்குவதையொட்டி, திங்கள்கிழமை இரவு பிரியாவிடை நிகழ்ச்சி


ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் ஜனவரி 7 (செவ்வாய்கிழமை) தொடங்குவதையொட்டி, திங்கள்கிழமை இரவு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் தொடங்குவதையொட்டி, ஸ்ரீவடபத்ரசயனரிடம் ஸ்ரீஆண்டாள் பிரியாவிடை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு இரவு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதியை சேர்ந்தார். ஸ்ரீபெரிய பெருமாள் சன்னதியில் ஸ்ரீஆண்டாள் ஏகாந்தத் திருமஞ்சனம், ஸ்ரீஆண்டாள் கைத்தல சேவை முடிந்து ஸ்ரீபெரிய பெருமாள் மூலஸ்தானத்திற்கு சேருதல் நடைபெற்றது.
திருக்காப்பு நீக்கலுக்குப் பின்னர், அரையர் வியாக்கியானம், திருப்பாவை 1-ம் பாட்டு மற்ற பாட்டுகளும் சேவித்தல் நடைபெற்றது. ஸ்தலத்தார் உற்சவ வைபவம் வாசித்தல், பஞ்சாங்கம் வாசித்தல் பொதுஜன சேவைக்குப் பின்னர், ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனமாகி மூலஸ்தானம் சேருதல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...