தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெலங்கானா விவகாரம் ஆந்திர சட்டசபையில் தொடர் அமளி

 தெலங்கான மாநில மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ். தெலங்கு தேசம் ,ஓய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையின் மையப்பகுதிக்கு வந்து

News image
Updated On :6 ஜனவரி 2014, 10:07 am

வேல்முருகன்

தெலங்கானா விவகாரம் காரணமாக இன்று ஆந்திர சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து. சட்டசபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

 தெலங்கான மாநில மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ். தெலங்கு தேசம் ,ஓய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர். மேலும் ஒன்றுபட்ட ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் கடும் அமளி ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து உறுப்பினர்களிடம் அமைதிகாக்க சபாநாயகர் நதேந்திலா மனோகர் வேண்டுகோள் விடுத்தார். எனினும் தொடர்ந்து கடும் அமளி ஏற்பட்டதால் சட்டசபை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். தெலங்கானா விவகாரத்தால்  கடந்த மூன்றுநாட்களாக சட்டசபை முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.