ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

 திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் அருள்மிகு நூறும்பூநாதசுவாமி உடனுறை  கோமதி அம்பாள் கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன. 17 ம் தேதி (வெள்ளிக்கிழமை) தைப்பூசத் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

News image
Updated On :8 ஜனவரி 2014, 8:10 am

ஷேக் அப்துல்காதர்

 திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் அருள்மிகு நூறும்பூநாதசுவாமி உடனுறை  கோமதி அம்பாள் கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன. 17 ம் தேதி (வெள்ளிக்கிழமை) தைப்பூசத் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

வீரவநல்லூர் அருகே திருப்புடைமருதூரில் தாமிரவருணி நதிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா புதன்கிழமை  கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஜன. 16 ம் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டமும், 17 ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும். பின்னர் சுவாமி அம்பாள் தீர்த்தவாரி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியை அடுத்து பிற்பகல் 2 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரவருணி நீராடி தரிசனம் செய்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.