சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அரசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த சாலையில் கவிழ்ந்ததில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் படுகாயமுற்றனர்.
12 பேர் காயமுற்றனர். சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி திங்கள்கிழமை இரவு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. சிதம்பரம் அருகே சீயப்பாடி எனுமிடத்தில் வந்து கொண்டிருந்த போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் மணிகண்டன் (37), நடத்துநர் தனவேல் (47), சாராபி என்ற பயணி ஆகிய மூவரும் படுகாயமுற்று சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். முஜ்புர்சுல்தான் 922), அருண்சம்பத் (29), ஜீவரத்தினம் (33), ராம்குமார் (27), சங்கர் (33), ராகுல்ஆசாத் (28), மணிமாறன் (33), பாரதி (25) உள்ளிட்ட 12 பேர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

