விருதுநகர் மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மதுப்பாட்டில்கள் விற்றதாக 32 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு 343 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 14,15 ஆகிய நாள்களில் அரசு மதுபானக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மதுபான பாரை ஏலம் பெற்று நடத்துகிறவர்கள் மற்றும் வெளிநபர்கள் ஆகியோர் மொத்தமாக மதுப்பாட்டில்களை வாங்கி அனுமதியின்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
அதையடுத்து, உடனே தீவிர ரோந்து செல்வதற்கு அந்தந்த பகுதி காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உத்தரவிட்டார். குறிப்பிட்ட அரசு விடுமுறை நாள்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அதன் அடிப்படையில் விருதுநகர்-சிவகாசி சாலையில் பார் பகுதி ஒரத்தில் மது விற்ற பாஸ்கரன்(23), கன்னிசேரி பகுதியில் வீரமணி(31), வெம்பக்கோட்டையில் பால்ச்சாமி(28), புதுப்பட்டியைச் சேர்ந்த திருப்பதி(33), ராஜபாளையம் சிவகுமார்(31), ஆலங்குளத்தில் ஆறுமுகம்(34) மற்றும் ஆறுமுகம்(23) உள்ளிட்ட 32 பேரை போலிஸார் கைது செய்தனர். அதோடு, விற்பனைக்கு வைத்திருந்த 343 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

