தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

அனந்தீஸ்வரர் கோயில் திருப்பணிகளில் குறைபாடு : முதல்வருக்குக் கடிதம்

சிதம்பரத்தில் இந்து அறநிலையத்துறையினரால் நடைபெற்று வரும் ஸ்ரீஅனந்தீஸ்வரர் கோயில் திருப்பணியில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளினால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினரும், கோயில் முன்னாள் நிர்வாக அறங்காவலருமான சிவா.கண்ணதாசன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

News image
Updated On :16 ஜனவரி 2014, 5:25 am

சிதம்பரத்தில் இந்து அறநிலையத்துறையினரால் நடைபெற்று வரும் ஸ்ரீஅனந்தீஸ்வரர் கோயில் திருப்பணியில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளினால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினரும், கோயில் முன்னாள் நிர்வாக அறங்காவலருமான சிவா.கண்ணதாசன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் ஆயிரம் தலை கொண்ட பதஞ்சலி முனிவர் வழிபட்ட ஸ்ரீஅனந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பணிக்காக தமிழக அரசால் ரூ.73 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக திருப்பணி பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு ஒதுக்கிய ரூ.73 லட்சம் செலவாகிவிட்டதாகவும், கூடுதலாக அரசு நிதி ஒதுக்கீடு செய்தால்தான் திருப்பணி பணிகள் தொடரும் என வேலைகளை அறநிலையத்துறை பொறியாளர் ஆகியோரின் ஒப்புதலின் பேரில் ஒப்பந்தகாரர் நிறுத்தி வைத்துள்ளார். இதனால் கடந்த 2 மாதங்களாக திருப்பணி பணிகள் நடைபெறவில்லை. இக்கோயிலுக்கு 79.24 ஏக்கர் நன்செய் நிலங்களும், 26.54 ஏக்கர் புன்செய் நிலங்களும் உள்ளன. மேலும் மனைகள் மூலமாக மாதவாடகை வருமானமும் உள்ளது.

வருமானம் அதிகமாக உள்ள கோயில் என்பதால் 2001-ம் ஆண்டு கோயிலுக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு அவர் பதவி உயர்வு பெற்று மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 9 ஆண்டுகளாக தில்லைக்காளியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி பொறுப்பில் உள்ளது இக்கோயில். எனவே சிதம்பரம் ஸ்ரீஅனந்தீவரர் கோயிலுக்கு அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி ஒருவரை நியமனம் செய்து திருப்பணிகளை தரமான முறையில் முடித்து குடமுழுக்கு செய்ய முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் சிவா.கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.