தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரத்தில் போலீஸ் விசாரணைக் கைதி மர்ம சாவு!

சிதம்பரம் மதுக்குடிக்க பணம் தர மறுத்த மூதாட்டியை கொலை செய்த விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார்.

Updated On :17 ஜனவரி 2014, 7:09 am

சிதம்பரம் மதுக்குடிக்க பணம் தர மறுத்த மூதாட்டியை கொலை செய்த விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார்.

சிதம்பரம் அருகே வரகூர்பேட்டையை சேர்ந்தவர் வள்ளியம்மாள்(65). வியாழக்கிழமை மாலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த இவரிடம், அருகில் உள்ள வீட்டில் குடியிருக்கும் சக்திவேல்(30) பணம் கேட்டாராம். மது குடிக்க பணம் தர முடியாது என வள்ளியம்மாள் மறுத்துவிட்டாராம். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகாராறு ஏற்பட்டதாம்.

அப்போது வள்ளியம்மாளை, சக்திவேல் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றாராம். அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த வள்ளியம்மாள், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அவர் வெள்ளிக்கிழமை காலை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மர்மமான முறையில் இறந்தார். பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.