தமிழக அரசு அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவரவர் தகுதிக்கேற்ப பொங்கல் கருணைத் தொகையை நிர்ணயித்து பொங்கலுக்கு முன்னதாகவே வழங்க அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் மட்டும் இன்றைய தேதி வரை வழங்கப்படவில்லை. எனவே இம்மாத சம்பளத்துடன், ஊழியர்களுக்கு கருணைத் தொகை வழங்காவிடில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக முன்பு பிப்.5-ம் தேதி மாவட்டத் தலைவர் சுகுமாறன் தலைமையில், நகரத் தலைவர் திருமாறன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வே.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.