இந்நிலையில் மறைந்த காவலர் ஜெயராஜ் சொந்தஊரில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஜெயராஜ் தற்கொலைக்கு உயரதிகாரிகள் திட்டியதுதான் காரணம். எனவே தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவரது மனைவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இறந்த காவலர் உடலுக்கு போலீஸ் மரியாதையுடன் அடக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி கீரப்பாளையம்- சேத்தியாத்தோப்பு சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் சாலைப் போக்குவரத்தை சிதம்பரம் சி.முட்லூர் புறவழிச்சாலை, புவனகிரி வழியாக சேத்தியாத்தோப்பிற்கு மாற்று வழியில் திருப்பி விட்டனர்.