கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி.ராஜன் வீரவணக்கநாள் உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர்கள் ரா.மாமல்லன் (குமராட்சி), வி.என்.ஜெயராமன் (புவனகிரி), முத்துசாமி (காட்டுமன்னார்கோயில்), காட்டுமன்னார்கோயில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.ராஜேந்திரகுமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எஸ்.மதியழகன், நகரமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.சி.மணிகண்டன், கோ.நடராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் க.அருள், ஏ.ரமேஷ். ஜாபர்அலி, வி.பி.பாலு, வ.சிவராமசேது உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நகர துணைச் செயலாளர் பா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.