வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் நாளை தொடக்கம்

மாநில அளவிலான மின்னொளியில் கூடைப்பந்துப் போட்டிகள் கல்லிடைககுறிச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2014, 12:59 pm

ஷேக் அப்துல்காதர்

மாநில அளவிலான மின்னொளியில் கூடைப்பந்துப் போட்டிகள் கல்லிடைககுறிச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது.

போட்டியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்க உள்ளது. திலக் ஹைட்ரா கூடைப்பந்தாட்டக் கழகம் சார்பில் கனடியன் டிராபி 2014 கோப்பைக்கான திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்தாட்டப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி பிப். 2 ம் தேதி வரை 3 தினங்கள் நடைபெறுகிறது. இப்போட்டியில் மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்கின்றன.

கல்லிடைக்குறிச்சி பாலகங்காதர திலக் மினி விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. பிப். 2 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.