விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் துறை அலுவலர் முனுசாமி முன்னிலை வகி்த்தார். இக்கூட்டத்தில் ஓய்வூதியர் துறை இயக்குநர் எம்.வி.மனோகரனிடம் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
பின்னர் இது தொடர்பாக அவர் பேசுகையில், ஓய்வூதியர்கள் மருத்துவச்செலவு மீளப்பெறுதல் சம்பந்தமான கோரிக்கை வரிசையாக பரிசீலிக்கப்பட்டு அதற்கான காசோலைகள் அந்தந்த ஓய்வூதியதாரர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இங்கு அளிக்கப்பட்ட மனுக்கள் மீதும் குறிப்பிட்ட நாள்களுக்குள் பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்பு பெற்ற 27 மனுக்களில் 22 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவி்த்தார்.
இக்கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், ஓய்வூதிய துறை அலுவலகத்தின் உதவி கருவூல அலுவலர் அசோகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) சி.பாண்டியராஜன்,மாவட்ட கருவூல அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

