தற்போதைய செய்திகள்
நெல்லையில் சுற்றுலாப் பேருந்து விபத்து : 4 பேர் பலி
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சுற்றுலாப் பேருந்துடன் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சுற்றுலாப் பேருந்துடன் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாப் பேருந்தில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். பேருந்தில் 38 பெண்களும், 18 ஆண்களும் இருந்தனர்.
கன்னியாகுமரி செல்லும் வழியில் வள்ளியூர் அருகே சாலையோரம் பேருந்து நின்றிருந்த போது, பின்னால் வந்த சரக்கு லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.