ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சீர்காழி அருகே அதிமுக வழக்குரைஞருக்கு அறிவாள் வெட்டு

சீர்காழி சேர்ந்தவர் வழக்கறிஞர் தியாகராஜன்(40). அதிமுகவை சேர்ந்த வழக்குரைஞரான இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் குறுக்கே ஓடியதாக தெரிகிறது.

News image
Updated On :31 ஜனவரி 2014, 11:33 am

ஞானவேல்

சீர்காழி சேர்ந்தவர் வழக்கறிஞர் தியாகராஜன்(40). அதிமுகவை சேர்ந்த வழக்குரைஞரான இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் குறுக்கே ஓடியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த அவர் சிறுவனின் தாயிடம் கண்டித்துள்ளார். அப்போது அங்கு வந்த நகராட்சி ஊழியர் மணிவண்ணன் என்பவர் தியாகராஜனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் மணிவண்ணன் வழக்குரைஞரை தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த வழக்குரைஞர் தியாகராஜன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து மணிவண்ணனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.