சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த வீட்டில் இன்று காலை திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது.
சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்த முருகன் எனபவர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து வந்துள்ளார். மேலும் வெளியில் தாயாரிக்கப்பட்ட சில பட்டாசுகளையும் வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் அந்த வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்துள்ளதாகவும் மேலும் வீட்டில் இருந்த சிலிண்டரும் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்த 3 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இந்த விபத்தில் முருகன் மனைவி சங்கரேஸ்வரி (45) படுகாயமடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முருகனின் தாயார் முனியம்மாள் மற்றும் முருகனின் மகன் சரவணன் ஆகியோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. முருகன் தலைமறைவானார். மீட்பு பணிகள் நடந்து வருகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

