/

சிவகாசியில் சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பு: திடீர் வெடி விபத்தால் 3 வீடுகள் சேதம்

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த வீட்டில் இன்று காலை திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது.

Updated On :3 ஜூலை 2014, 5:39 am

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த வீட்டில் இன்று காலை திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது.

சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்த முருகன் எனபவர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து வந்துள்ளார். மேலும் வெளியில் தாயாரிக்கப்பட்ட சில பட்டாசுகளையும் வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் அந்த வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்துள்ளதாகவும் மேலும் வீட்டில் இருந்த சிலிண்டரும் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்த 3 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

இந்த விபத்தில் முருகன் மனைவி சங்கரேஸ்வரி (45) படுகாயமடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முருகனின் தாயார் முனியம்மாள் மற்றும் முருகனின் மகன் சரவணன் ஆகியோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. முருகன் தலைமறைவானார். மீட்பு பணிகள் நடந்து வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.