மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் சுமார் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி இது அரசின் கொள்கை முடிவு. உங்களது கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சி.எம்.எஸ்.மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சுய நிதி பாடப் பிரிவில் படித்த சுமார் 300 மாணவ மாணவியர் மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு திடீரென தங்களுக்கும் அரசின் விலையில்லா மடிக்கணினி வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.