கேரள கழிவுகளை எரிக்கும் போது தீ விபத்து: அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களுக்கு மயக்கம்
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வெள்ளிக்கிழமை கேரளா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட கழிவு பிளாஸ்டிக்குகளை எரித்த போது தீ பயங்கரமாக கரும்புகையுடன் அருகில் பரவியது. இதனை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களில் இருவருக்கு இந்த புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது.







