தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அண்ணாமலைப் பல்கலையில் நிலச்சரிவு மேலாண்மை குறித்த பயிலரங்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் இணைந்து பல்கலைக்கழக புவிஅறிவியல் துறையில் நிலச்சரிவு மேலாண்மை குறித்த 5 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை

News image
Updated On :22 ஜூலை 2014, 12:35 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் இணைந்து பல்கலைக்கழக புவிஅறிவியல் துறையில் நிலச்சரிவு மேலாண்மை குறித்த 5 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. முகாமில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 36 பேர் பங்கேற்றனர்.

விழாவில் புதுதில்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சிறப்பு பேராசிரியரும், காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எஸ்.ராமசாமி பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் நிலச்சரிவுகள் மலைப்பாங்கான நில பகுதிகளில்தான் அதிகமான தாக்குதலை ஏற்படுத்துகின்றது என்றும், இதனால் அப்பகுதிகளில் மண் அரிப்புகள், பொது உள்கட்டுமானங்கள், நீர்பாசனங்கள், கால்வாய்கள், பாலங்கள் உள்ளிட்டவை அதிக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்றார்.

கடல் அறிவியல் புல முதல்வர் முனைவர் கே.கதிரேசன் தொடக்க உரையாற்றினார். அவர் பேசுகையில் இந்தியாவில் நடக்கும் நிலச்சரிவு மனிதவளத்தை மட்டுமின்றி தாவரங்களையும், உயிரினங்களையும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. உயர் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறையின் அவசியம் குறித்தும் விளக்கினார். தேசிய பேரிடர் நிறுவன பயிற்சி இயக்குநர் முனைவர் சூர்யபிரகாஷ் பேசுகையில் இயற்கை அதிகமான சேதத்தை ஏற்படுத்துவதாகவும், ஆகையால் நிலச்சரிவு பாதிப்புள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அதில் வெவெற்று வகையான ஆய்வுகளை மேற்கொண்டு ஆபத்தை குறித்தும், பாதுகாக்கும் முறைகளை கண்டறிய வேண்டும் என்றார்.

முன்னதாக புவி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் டி.ராம்குமார் வரவேற்று பேசுகையில் இந்தியாவில் சுமார் 15 சதவீத பகுதி நிலச்சரிவுகள் நிகழும் இடமாக உள்ளது. நிலச்சரிவு மூலம் மக்களின் வாழ்வாதாரம், வாழும் இடம் கட்டமைப்புகள் மற்றும் இயற்கை வளங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றார். முகாம் அமைப்புச் செயலாளர் முனைவர் எஸ்.வாசுதேவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.