இந்நிலையில் போலீஸாருக்கு தெரியாமல் அவரது உடலை கீழே இறக்கி அவரது அண்ணன் மற்றும் உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை காலை எடுத்துச் சென்றுள்ளனர். கார்த்திகேயன் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அஸ்வின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார், ஓமக்குளம் அருகே மயானத்திற்கு கொண்டு சென்ற சடலத்தை மறித்து, பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி அளித்த புகாரின் பேரில் நகர போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, இறந்த வாலிபர் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.