சிதம்பரம் அருகே மீன்பிடித்தவரை, முதலை கடித்தது: முதியவர் படுகாயம்
சிதம்பரம் அருகே உள்ள மேலபருத்திக்குடியைச் சேர்ந்தவர் ஆர்.மாசிலாமணி (60). இவர் செவ்வாய்க்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் 5 பேருடன் சேர்ந்து இடுப்பளவு நீரில் நின்று கொண்டு மீன் பிடித்துக்


சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்தவரை, முதலை கடித்தது. இதில் படுகாயமுற்ற முதியவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் அருகே உள்ள மேலபருத்திக்குடியைச் சேர்ந்தவர் ஆர்.மாசிலாமணி (60). இவர் செவ்வாய்க்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் 5 பேருடன் சேர்ந்து இடுப்பளவு நீரில் நின்று கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நீருக்கடியில் இருந்த முதலை ஒன்று அவரது வலது காலை கவ்வி குதிறியதால் மாசிலாமணி அலறினார். இதனை பார்த்து அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் முதலையிடமிருந்து காப்பாற்றி அவரை கரைக்கு கொண்டு வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். வலது காலில் படுகாயம் அடைந்த ஆர்.மாசிலாமணி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...