தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சிதம்பரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

News image
Updated On :22 ஜூலை 2014, 8:56 am

ஜி.சுந்தரராஜன்

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில துணைப் பொதுச்செயலாளர் கு.திருஞானம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் முரகன் வரவேற்றார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, பழனிசாமி, வேலு, பால்ஸ் ரவிக்குமார், விஜயக்குமார், பாஸ்கர், சிவக்குமார், செள.ராஜா, சந்தானக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தேவதாஸ் படையாண்டவர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், மாவட்டத் தலைவர் பூக்கடை கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் கலையரசன், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். நகரத் தலைவர் பி.கே.அருள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.