மாநில துணைப் பொதுச்செயலாளர் கு.திருஞானம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் முரகன் வரவேற்றார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, பழனிசாமி, வேலு, பால்ஸ் ரவிக்குமார், விஜயக்குமார், பாஸ்கர், சிவக்குமார், செள.ராஜா, சந்தானக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தேவதாஸ் படையாண்டவர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், மாவட்டத் தலைவர் பூக்கடை கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் கலையரசன், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். நகரத் தலைவர் பி.கே.அருள் நன்றி கூறினார்.