திருவள்ளூர், காஞ்சிபுரம், சிதம்பரம் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்களுக்கு தீ வைப்பு, வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. தர்மபுரி சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் தலித்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. காவல்துறையினரும் தலித்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். புகார் அளிக்க சென்ற தலித் மக்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.தமிழகத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்து வருகிறது. இந்த பிரச்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு கவனம் செலுத்தி தலித் மக்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும்.