சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான வனிதா கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பா.கணேசன் (31) கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அவரது காதலி வனிதா (25) புதன்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய


சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பா.கணேசன் (31) கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அவரது காதலி வனிதா (25) புதன்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பா. கணேசன் செவ்வாய்க்கிழமை இரவு அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள ஸ்ரீசக்கரா அவென்யூ பகுதியில் அவர் வசிக்கு வந்த வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணேசனுடன் தகாத உறவு வைத்திருந்த சிதம்பரம் அருகே உள்ள அம்பலத்தாடிகுப்பத்தைச் சேர்ந்த கலைமணி என்பவரின் மனைவி வனிதா (25) என்ற பெண் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.
பின்னர் போலீஸார் அவரை கைது செய்து விசாரித்ததில், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வற்புறுத்தியதன் பேரில் வனிதா, தனது கணவன் கலைமணியிடமிருந்து விவாகரத்து பெற்றதாககவும், இந்நிலையில் கணேசன் தன்னை விட்டு, விட்டு வேறொரு ஒரு பெண்ணை கடந்த ஜூலை 9-ம் தேதி திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் வனிதா, கணேசனை திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட வனிதாவை புதன்கிழமை இரவு சிதம்பரம் நம்பர்-1 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி, அப்பெண்ணை காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, வனிதா கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக வனிதாவிற்கு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...