தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழக அறிமுகக் கூட்டம்

சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழக அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் இல.கணபதிமுருகன் தலைமை வகித்துப் பேசினார்.

News image
Updated On :25 ஜூலை 2014, 3:16 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழக அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழக அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் இல.கணபதிமுருகன் தலைமை வகித்துப் பேசினார்.

அவர் பேசியது: தேர்தலில் நிற்பவர்களது சொத்து விபரம் மற்றும் அவரது குற்றப்பின்னணி குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற தீர்ப்பினையும்ம், வீட்டற்றவர்களுக்கும், அநாதைகளுக்கும் இரவில் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை அரசு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பினையும், தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நிலைப்பாட்டை பெற்ற தந்த நோட்டா உரிமை போன்ற தீர்ப்பினையும் மக்கள் சிவில் உரிமைக்கழகம் நீதிமன்றத்தின் வாயிலாக நிலை நாட்டிய சாதனைகளாகும். மேலும் சமீபத்தில் காவல் நிலையச்சாவுகள், மோதல் சாவுகள் (Encounter deaths) ஆகிய தடுக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பினையும் பெற்று மனித உரிமைகளின் பாதுகாவலனாக இந்த இயக்கம் திகழ்கிறது என இல.கணபதிமுருகன் தெரிவித்தார்.

கூட்டத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழக தமிழ் மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பாலமுருகன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் இ.மணமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று மக்கள் உரிமைகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து உரையாற்றினர். துணைப் பேராசிரியர் ஆ.முத்துக்குட்டி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.