போலீஸார் மீது கல்வீச்சு, இரு இன்ஸ்பெக்டர்கள் காயம்: இருவர் கீழே விழுந்து இறந்த சம்பவத்தை முன்னிட்டு சம்பவ இடத்திற்கு பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.உதயகுமார், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் விரைந்தனர். அப்போது பவர் கம்பெனியில் பணியாற்று சக ஊழியர்கள் கற்கள் மற்றும் சிமெண்ட் காரைகளால் போலீஸார் மீது வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர்கள் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், கே.உதயகுமார் ஆகியோர் தலையில் காயமுற்ற பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். பின்னர் போலீஸார் லேசான தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர்.