அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் கல்பள்ளிவாசல் இப்தார் விருந்து எம்.எல்.ஏ பங்கேற்றார்

விருதுநகர் கல்பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம் சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்

News image
Updated On :28 ஜூலை 2014, 3:17 pm

விருதுநகர் கல்பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம் சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் திங்கள்கிழமை கலந்து கொண்டனர்.  

    விருதுநகர் கல் பள்ளிவாசல் ஜமாத்தின் செயலாளர் ஜாபரூல்லா தலைமை வகித்தார். பெரியபள்ளிவாசல் ஜமாத் தலைவர் எகியாகான் முன்னிலை வகித்தார். இந்த மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் பங்கேற்று பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவி்த்துக் கொண்டார்.

     மேலும், இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி, நகராட்சி தலைவர் மா.சாந்தி, அதிமுக நகர செயலாளர் முகமது நயினார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் முஸ்லீம் ஜாமத்தை சேர்ந்தவர்கள் இப்தார் விருந்து அளித்து சிறப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.