ஜூன் 2:2013-2014ல் மதுவிலக்கு குற்றவாளிகள் கோர்ட் மூலம் 199 பேர் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். என, தமிழ்நாடு மதுவிலக்கு காவல் துறை கூடுதல் இயக்குனர்(ஏ.டி.டி.ஜி.பி.,) காந்திராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பழநி மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனில் அவரது தலைமையில், மதுவிலக்கு சம்மந்தமான ஆய்வுக்கூட்டம் நடந்தது. பின்னர் காந்திராஜன் கூறியதாவது; மாநிலம் முழுவதும், 2013ம் ஆண்டில், மாவட்ட காவல் துறையினர் மதுவிலக்கு காவல் ஆளினர் மற்றும் புலனாய்வு பிரிவினர், கூட்டாக நடத்திய வேட்டையில், 89,169 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்குகளில் 1893 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2,41,93,950க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அரசு கருவூலத்தல் செலுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் வரையில், மதுவிலக்கு புலனாய்வு பிரிவினர் கூட்டாக நடத்திய வேட்டையில், 36,878 வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த ரூ.96 லட்சம் மதிப்புள்ள கள்ளச்சாராயம், ரூ.23 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களில் ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.