அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே இடி மின்னல் தாக்கி இளைஞர் சாவு

சாத்தூர் அருகே மொட்டைமாடியில் போன் பேசி்க் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதால் படுகாயம் அடைந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On :2 ஜூன் 2014, 1:44 pm

சாத்தூர் அருகே மொட்டைமாடியில் போன் பேசி்க் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதால் படுகாயம் அடைந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

    சென்னை கிண்டியில் உள்ள எல்லைமுத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு(29). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியைச் சேர்ந்த கணேசனும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணேசனின் புது வீடு கிரேக பிரவேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தராம். அதையடுத்து மறுநாள் வீட்டு விஷேச நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

     இதையடுத்து திங்கள்கிழமை மாலையில் கருமேகம் சூழ்ந்து சூறைக்காற்றுடன் இடி மின்னல் ஏற்பட்டுள்ளது. அப்போது, மொட்டைமாடிப் பகுதியில் செல்போன் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென மின்னல் தாக்கியதாம். இதில், காதுப் பகுதி கருகி படுகாயம் அடைந்தாராம். உடனே அங்கிருந்தவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி உயிரிழந்தாராம். இது தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.