மர்மநபர்கள், ரவியிடம் நகைகளை பெற்று குக்கரில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பொடியை கலக்கி அதில் நகைகளை போட்டு மூடினர். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கினால் நகைகள் மெருகேறிவிடும் என கூறினர். அதன்படி குக்கரை அடுப்பில் ரவி குடும்பத்தினர் அடுப்பில் வைத்தனர். இந்நிலையில் மர்மநபர்கள் குக்கர் சூடாகும் வரை பக்கத்து வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். சென்ற நபர்கள் திரும்பி வராததால், சந்தேகமடைந்த ரவி குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி திறந்து பார்த்த போது நகைகள் காணாதது கண்டு அதிரிச்சியுற்றார். நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது குறித்து ரவி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.