விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம்: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து

News image
Updated On :9 ஜூன் 2014, 6:40 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் தொடங்கவுள்ளதையொட்டி, திங்கள்கிழமை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.இந்த ஆண்டு உற்சவத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, பெரிய தேரில் நடைபெற்றது. கோயில் பட்டர் டாக்டர் வெ.வாசுதேவன் முகூர்த்தக்காலுக்கு விசேஷ பூஜைகளை நடத்தினார்.

ஆடிப்பூர உற்சவம் ஜூலை 22-ம் தேதி (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஐந்து கெருட சேவை ஜூலை 26-ம் தேதி (சனிக்கிழமை) யும், தேரோட்டம் ஜூலை 30-ம் தேதி (புதன்கிழமை) யும் நடைபெறுகிறது.உற்சவ நாட்களில் கோயின் சன்னதி முன்பு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.