புகாரின் பேரில் கேரள போலீஸ் உதவி கமிஷனர் சுனில் குமார், சப்இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் குழு அமைத்து தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். ஷியாமின் செல்போன் எண் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்த நிலையில் செல்போன் ஈஎம்ஐ ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போன் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த எண்ணில் கேரள போலீஸார் தொடர்பு கொண்ட போது அந்த நபர் கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்றும் வைகாசி விசாகத்தின் போது பழனிக்கு சென்றபோது இடும்பன் கோயில் மலைப்பகுதியில் கிடந்த ஒரு வாலிபரின் பிணம் அருகே இருந்து தனக்கு செல்போன் கிடைத்தாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.