மாயனூர் அருகே கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் வினிதா(17). இவர் கரூர் வீரராக்கியத்தில் உள்ள கொசுவலை கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தார்.
Updated on
1 min read

மாயனூர் அருகே வெற்றிலை கொடிக்கால் தோட்டத்திற்குள் திங்கள்கிழமை இரவு இளம்பெண் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் வினிதா(17). இவர் கரூர் வீரராக்கியத்தில் உள்ள கொசுவலை கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தார். வழக்கம்போல திங்கள்கிழமை காலை வேலைக்குச் சென்றவர் இரவு 9 மணியாகியும் வீட்டுக்கு வராததால், பொன்னுசாமி, கொசுவலை நிறுவனத்துக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போது கொசுவலைக்கம்பெனியினர் வழக்கம்போல வினிதா வேலை முடிந்த பிறகுச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.இதையடுத்து பொன்னுசாமி அவரது உறவினர்கள் வீடுகளில் தேடினார். அப்போதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சித்திலவாய்-பிச்சம்பட்டி சாலையில் உள்ள வெற்றிலைக் கொடிக்கால் தோட்டத்தில் இளம்பெண் இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்குச் சென்று பார்த்தபோது வினிதா, ஆடைகள் களைந்த நிலையிலும், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் சடலமாகக் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாயனூர் போலீஸார் மற்றும் குளித்தலை துணைக் கண்காணிப்பாளர் ஜமீம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்த பெண் கற்பழித்துக்கொலை செய்யப்பட்டாரா எனவும் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை காலை திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ராமசுப்ரமணியும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com